'நான் பேச நினைப்பதெல்லாம்' என்னும் Youtube பக்கத்தில் வெளியாகி பரிசுப்பெற்ற என் காணொளிகள்.
1. கானல் நதி - யுவன் சந்திரசேகர்
2. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
3. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
'நான் பேச நினைப்பதெல்லாம்' என்னும் Youtube பக்கத்தில் வெளியாகி பரிசுப்பெற்ற என் காணொளிகள்.
1. கானல் நதி - யுவன் சந்திரசேகர்
2. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
3. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
உறை குருதி
சுடுகாட்டு சாம்பல் மேட்டின் மேல் மெல்ல ஊர்ந்தது ஓர் நச்சரவம்.
பத்தி விரித்து சூழ நோக்கி பிளநா நீட்டி காற்றில் ஹிஸ்ஸிட்டு நீளுடல் சுருட்டி அமைந்தது.
அணைந்த சிதைக்குள் உறையும் கதுப்பில் உடல் வெம்மை கூட்டியது.
ஏனெனில் அரவங்கள் கோல்டு-ப்லடட்.
வெதுப்பில் கண் சொக்க ஓர் அசைவை உணர்ந்தது.
சாம்பல் புகை சுற்றி படர எழுந்தமர்ந்தது ஓர் உடல்.
தன் சிறுமணி மூளைக்குள் உயிர்வாழ்திரவம் சுரக்க அவ்வுடலின் கழுத்து நாகத்தை சுருண்டு இறுக்கியது நச்சரவம்.
கை நாகங்களும் கால் நாகங்களும் மேல், கீழ், கிடை என அளைந்தடங்கியது.
உடல் இறுக்கம் தளர தன் இறுக்கம் தளர்த்தி சுற்றி விழியொட்டியது.
அனைத்து சிதை மேலும் உடல் தூக்கி பார்த்து மீண்டும் படுத்தன நிழலிருள் உருவங்கள்.
நாம் மட்டும் கோல்டு-ப்லடட் இல்லை போலும் என தன் உடல் சுருட்டி நிலை மீண்டு வெதுவெதுப்பான இரத்த ஊறலை கேட்டது.
***
அன்புள்ள ஜெயமோகன்,
தினமும் கதைகள் வெளியாவதால் அவற்றிக்கு இடையே உள்ள தொடர்புகளை, பொதுத்தன்மைகளை தான் மனம் தானாக தேடுகிறது. அதுபோல, நேற்று இரவு ஒரு எண்ணம் தோன்றியது.
வெளியான கதைகளில் வரும் ஒயரால் கூடு கட்டும் குருவி(குருவி), மின் கம்பியில் விடபிடியாய் கிறங்கி கிடக்கும் மலைப்பாம்பு(லூப்), ஊருக்குள் நுழைந்து மனிதர்களோடு சேர்ந்து குடிக்கும் குரங்கு(இடம்), மலைச்சாலையில் டீசல் முகர்ந்து நிற்க்கும் யானைகள்(அங்கி) என்று வரும் விலங்குகள் மனித நவீன நாகரீகத்திற்குள் நுழைகின்றன. இப்பட்டியலில் வீட்டிற்குள் நுழையும் ‘ஆனையில்லா!’ யானையையும் சேர்க்கலாம்.
இவை ஏன் இங்கு வருகின்றன?கூடுகட்ட நார்கள் கிடைக்கவில்லையா குருவிக்கு? அவ்வளவு அழுத்தமாக, மின் கம்பியை விட்டு ஏன் செல்ல மறுக்கிறது அந்த மலைப்பாம்பு? ஊருக்குள் நுழைந்தத்திற்கு அந்த குரங்கு கூறும் காரணம் என்ன?
இவற்றில் பெரும்பாலானவற்றை (பாம்பு, குரங்கு) மனிதன் முதல் விலக்கவே பார்க்கிறான். பின்னர் அவற்றை ஏற்றுக்கொள்கிறான்.
அந்த விலங்குகள் தன் இனத்தின் இயல்பை மீறி வேறொன்றிக்குள் வருகின்றன. தங்களை Adapt செய்து கொள்கின்றன.ஒயரால் தன் கூட்டை கட்டிய குருவி நாளை அலைபேசி டவரில் தன் வீட்டை கட்டினாலும் கட்டும் போலும்!
“வாழ்வை சித்தரிப்பது அல்ல என் கதைகள், அவற்றின் அடிப்படையை ஆராய்வது” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அவை மனித வாழ்வையும் கடந்ததாக எனக்கு படுகிறது. உங்கள் கதைகள் எண்ண எண்ண விரியும் விதைகளாக உள்ளது.
தங்கள்,
கிஷோர் குமார்.
திருச்சி.
அன்புள்ள ஜெயமோகன்,
‘மலைகளின் உரையாடல்’ வாசித்தேன். கதையின் களம் ‘குருவி’ சிறுகதையின் தொடர்ச்சியாக இருந்தாலும் இதன் கரு ‘விசும்பு’ கதையின் நீட்சியாக எனக்கு படுகிறது.
ஒரு சிறு பறவைக்கும் மற்ற உயிரினங்களுக்குமான தொடர்பை விசும்பு பேசுகிறது. (ஒரு பறவை இனத்தின் திசை மாற்றம், மற்ற பறவைகளின் திசையை பாதிக்கிறது, மீன்களும் திசை மாறி பயணிக்கிறன.)அறிவியலின் எல்லைகளையும் கூறுகிறது.
மலைகளின் உரையாடல் இயற்கையின் அஃறிணைகளுக்கு இடையேயான தொடர்பை கூறுகிறது. ஒரு குருவி கட்டிய கூட்டில் மனிதன் மின்சாரம் செலுத்தும் போது எவ்வித எதிர்வினைகளும் இல்லை. ஆனால் அக்கூடு வானின் மின்னைலுக்கு பதிலுரைகிறது. இடி முழக்கம், மலைகளுடன் உரையாடுகிறது. வான் மின்னல், குருவி கூட்டுடன் உரையாடுகிறது. இடியும் மின்னலும் மேகங்களின் உரையாடலில் பிறக்கிறது.
அக்குருவி கூட்டினை போலவே ஒரு மாபெரும் இயற்கையின் பின்னலை, ஒரு ஓயாத உரையாடலை இக்கதை உணர்ந்துகிறது.மிக அற்புதமான கதை.
ஒரு சிறுகதையை வாசித்து முடித்து பின்னர் அதன் தலைப்பை பார்ப்பது ஒரு அனுபவத்தை தரும். ஆனால் இக்கதையின் தலைப்பு ஒரு பெரும் விரிவை நோக்கி செல்லாமல் உள்ளதாக படுகிறது. விசும்பை போலவே கதை ஒரு பரந்த தரிசனத்தை கொடுத்தாலும், இதன் தலைப்பு ‘மலைகளுக்கு இடையேயான உரையாடலை’ மட்டும் குறிப்பிட்டு குறுகுகிறது. மறுவாசிப்புகளில் அதன் பிடி கிடைக்கலாம்.
தங்கள்,
கிஷோர் குமார்.
திருச்சி.
அன்புள்ள ஜெயமோகன்,
இன்று ஒரு அருமையான ஞாயிறு. காலை தளத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றுமொரு ஒளசெபச்சன் கதை. கைமுக்கு பற்றி பேச ஆரம்பித்து – திருடர்கள் – போலீஸ்கள் – மாணவர்கள் – என பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்து மீண்டும் கைமுக்கில் ஒரு திருப்பதுடன் முடித்துள்ளீர்கள். எவ்வளவு பெயர்கள் Dostoyevsky முதல் சுந்தரராமசாமி வரை.
ஒளசெபச்சன் வரிசை கதைகளை வாசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது. ஒரு வீடியோவில் இருவர் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே tennis விளையாடுவார்கள். அதுபோல, நீங்கள் நாகர்கோவிலில் இருந்து கதையின் வரிகளாக பந்தை அடிக்கிறீர்கள், நாங்கள் தடுமாறி அதை திருப்பிடிக்கிறோம். அடுத்த வரி எதிர்பாரத ஒரு வேகமாக வருகிறது, நாங்கள் அதை நோக்கி ஓடுகிறோம். ‘ஆகா, மாட்னாங்கடா!’ என்று முகம் முழுக்க புன்னகையுடன் நீங்கள் கதை எழுதுவது இங்கே தெரிகிறது.
பிறகு, படிக்காமல் விட்ட மாயப்பொன், உலகெலாம் கதைகளை படித்தேன். ஒன்று நிலவே கீழிறங்கி, கடுவனும் காட்டை விட்டு நேசயன்னை நோக்கி வரும் கதை. உலகம் அவனை நோக்கி குவிகிறது. மற்றொன்று தன் எமனை நேருக்கு நேர் எதிர் கொண்டதால் உலகம் நோக்கி விரியும் கதை. இரண்டுமே அற்புதமானவை.
வாசித்து முடித்து வெளியே வந்தால் மழை பெய்து கொண்டிருக்கிறது. திருச்சி மிகவும் வெப்பமான மாவட்டம். அதில் இந்த கோடை மழை ஒரு வரப்பிரசாதம். வான் சிற்றலை. பால்கணியில் அமர்ந்து உங்கள் கதைகளை மழையில் அசை போடும் அருமையான அனுபவத்தை தந்தமைக்கு நன்றி.
தங்கள்
கிஷோர் குமார்
***
அன்புள்ள கிஷோர்,
உண்மையில் ஒரு கதை இன்னொரு கதையை உருவாக்கும். இதை பெரும் படைப்பாளிகள் பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு கதைவழியாக ஓர் உயரத்திற்குச் சென்றபின் மேலும் மேலும் செல்லமுடியும். உலகின் சில ஆசிரியர்களின் மகத்தான கதைகள் ஓரிரு நாளில் தொடர்ந்து எழுதப்பட்டவை. குறிப்பாக பால்ஸாக் அப்படி நிறைய எழுதியிருக்கிறார். அது ஒரே வைரத்தை திருப்பித்திருப்பி முடிவில்லாது பார்த்துக்கொண்டிருப்பதுபோல
ஜெ