Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

May 21, 2020

திருச்சி இலக்கியம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் கடிதம் கிடைத்தது. நலமுடன் இருக்கிறேன். தாங்கள் அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றி.

தாங்கள் கூறியபடி ஒரு படைப்பு தரும் அனுபவத்தை விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்.

நான் திருச்சியில் வசிப்பவன். இங்கு இலக்கிய, வாசிப்பு குழுக்கள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும். ஏனென்றால் இலக்கியம் சார்ந்து உரையாட எனக்கு யாரும் இல்லை. கடிதம் மூலம் தங்களுக்கு எழுதுவதோடு சரி.

நன்றி.

தங்கள்,

கிஷோர் குமார்

***

அன்புள்ள கிஷோர்குமார்

திருச்சியில் வாசகசாலை போன்ற அமைப்புக்கள் கூட்டங்கள் நடத்துகின்றன என நினைக்கிறேன். திருச்சியில் நடக்கும் கூட்டங்களை சில அரைவேக்காட்டு ஆசாமிகள் நடக்கவிடாமல் பேசிக்குலைக்கும் செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய அங்கே உருப்படியாக ஒரு கூட்டம் நடந்ததாக நான் சென்ற பல ஆண்டுகளில் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை அதனாலேயே பலரும் சோர்ந்து ஒதுங்கிக்கொண்டிருக்கலாம்

ஜெ

***

05-09-2019