Posts

Showing posts from October, 2020

பவா செல்லதுரைக்கு கடிதம்

அன்புள்ள பவா, நான் கிஷோர் குமார், திருச்சியில் வசிக்கும் கல்லூரி மாணவன். பல மாதங்களாக எழுத நினைத்துத் தயங்கி, இன்று ஏதோ ஒரு உந்துதலில் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். உங்களுக்கு ஒரு ஆயிரம் நன்றிகள் கூறி இக்கடிதத்தைத் தொடங்க விரும்புகிறேன். 2 ஆண்டிற்கு முன்பு புத்தகங்கள் வாசிக்கும் விருப்பம் ஏற்பட, இணையதளங்களில் தேடி அலைந்த பொழுது தான் தங்களை youtubeல் கண்டடைந்தேன். உங்கள் பெயரே எனக்கு முதலில் தயக்கத்தை உண்டு பண்ணியது , "என்ன பேர் இது?!" என்று முதலில் தவிர்த்து வந்த நான் பின்னர் உங்கள் பெரும் ரசிகனாக மாறினேன். உங்கள் சொற்கள் காட்சிகளாகக் கனவுகளையும், கண்ணீராகக் கண்களையும், அன்பால் நெஞ்சத்தையும் நிறைத்தது. நன்றிகள் அதற்காக மட்டுமல்ல, இன்று நான் என்னை ஒரு வாசகனாகவே அறிமுகம் செய்வேன். நீங்கள் கூறிய ' ஊமைச்செந்நாய்' கதை வழியே நான் ஜெயமோகனை சென்றடைந்தேன். அவரது எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படி சொற்களால் விளக்குவது என்று தெரியவில்லை. வில்லின் நாணைப் போல் அவர் என்னுள் எதனையோ சுண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரது தளம் இன்றைய சலிப்பும் வெறுப்பும் நிரம்பிய ச

வெள்ளையானை - ஜெயமோகன் - கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன், வெள்ளையானை வாசித்தேன். இன்று மானுடத்தின் அடிப்படைகளாக விளங்கும் ஜனநாயகம், சுதந்திரம் போன்ற விழுமியங்களைப் பெறச் சிந்தப்பட்ட குருதியையும் விழிநீரையும் பதிவு செய்த படைப்பு. எத்தனை சிலுவையேற்றங்களையும் எத்தனை உயிர்த்தெழல்களையும் மனிதன் கடந்து வந்திருக்கிறான்... ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாள் மட்டுமே நீடித்து, மறுநாள் சுவடே இல்லாமல் துடைத்தழிக்கப்பட்ட அந்த போராட்டம் வரலாற்றில் மிகச் சிறு சலனம்தான். ஆனால், வரலாறு ஒரு கடல். ஆழத்தில் உறைந்திருக்கும் 'டெக்டானிக் ப்ளேட்'ன் சிறு சலனம் தான் ஆழிப்பேரலையாக எழுகிறது. அப்படி அவர்களின் பிற்கால எழுச்சிகளுக்கு வழிவகுத்த முதற்கனல் தான் அந்த போராட்டம். ஏய்டன் - உங்கள் புனைவுலகின் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் ஒருவன். அவன் அகம் முழுக்க ஐயர்லாந்தின் விரிந்த புல்வெளிகள் தான் நிறைந்துள்ளது. அப்புல்வெளிகளில் ஒரு கையில் வாளும் மறுக்கையில் குழலும் ஏந்தி நிற்கும் தேவதையாக (அல்லது சாத்தனாக) ஷெல்லி. அவனது அகம் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. கவிஞனாகவும் படைவீரனாகவும் ஊசலாடிக்கொண்டே இருக்கிறான். ஆம், பசும்புல்வெளியாகவும் நீலக்கடலாக