Showing posts with label இடக்கை. Show all posts
Showing posts with label இடக்கை. Show all posts

May 21, 2020

உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்: சிறு குறிப்பு.

உறுபசி - கல்பொருசிறுநுரை 


சம்பதின் மறைவிற்கு பிறகு அவனது நண்பர்கள் வழியே சிதறிய நினைவுகளாக அவனது வாழ்வு சொல்லப்படுகிறது. 

அழகர், ராமதுரை, மாரியப்பன், யாழினி, ஜெயந்தி இவர்கள் ஐவரும் கண்ட சம்பத் தன்னை ஒரே நேரத்தில் ஈர்க்கவும், விலக்கவும், வெறுக்கவும் செய்பவனாக உள்ளான். செடிகளை விற்க மறுப்பவன், தீப்பெட்டி தீக்குச்சிகளை விரும்புபவன், சதா சிந்தனை செய்பவன் போன்ற வித்யாசமான குணங்களை கொண்டவன். 
தன்னை ஒரு கள்ளிச்செடி என்றும் அணைப்பவர்களை காயப்படுத்துவேன் என்றும் நினைக்கிறான். 
பலகோடி நட்சத்திரங்கள் இருக்கும் வானில் ஒரு எரிக்கல் போல் பிரகாசமாக ஒளிர்ந்து அணைகிறான். தீக்குச்சி போல் எரிந்து முடிகிறான். கல்பொருசிறுநுரை போல் பொங்கி அமிழ்கிறான்.

இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் : நாவலனுபவம்

தானே உலரும் கண்ணீர்
எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல்
 
சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும், அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றி தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது.  

இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலைக் குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டுச் சென்றுள்ளது.