Posts

Showing posts from May, 2021

அடிக்கோடுகளின் வழியே அலகிலா விளையாட்டு

  அலகிலா விளையாட்டு பா. ராகவன் > உடலின் உறுதிக்கும் மனத்தின் உறுதிக்கும் ஒருங்கே சவால் விடுகிற சமுராய் வீரன் - குளிர். > குளிர். காரம். மிளகாய்ச் சட்னி. ரொட்டி. பருப்புக்கூட்டு. பகவான். > நதிப்பாதையெங்கும் கூழாங்கற்களைக் கொட்டிவைத்தது யார்? கடவுள் தான் என்றால் அவரது அழகுணர்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். > ஒன்று புரிந்தது. வாழ்வின் ஆகப்பெரிய அர்த்தம் வாழ்ந்து தீர்ப்பது தான். > கால்மாட்டில் தலைவைத்துப் படுப்பதன்மூலம் அறையைப் புரட்டிப்போட்டதாக நினைத்துக்கொள்வது மாதிரி. > வெளிச்சம், புத்தியின் விழிப்புநிலைக் குறியீடு. > ஆம்பர் கலைந்து பச்சை விழும் தருணம். > அவரவர் வலிகளின் வீரியத்தை அங்கீகரிக்க முடியுமே தவிர அறியவா முடிகிறது? > என் பரம்பொருள், என் சந்தோஷம். என் பரம்பொருள், என் பிரக்ஞை. அதை இழக்காதவரை எனக்குத் தோல்வியில்லை. > அற்ப உதவிகளைப் பெரிது படுத்துவதன் மூலம் சார்ந்திருத்தலெனும் உயரிய தத்துவத்தைக் கொச்சைப்படுத்தலாகாது. > துறந்திருக்கிறோம் என்கிற உணர்வைத் துறப்பது. > கண்ணுக்குத் தென்படாத ஓர் அபூர்வ அப்பம். உனக்கு ஒரு கிள்ளு. அவனுக்கொ

வெக்கையும் சாரலும் : பூமணியின் வெக்கை நாவல்

வெக்கையும் சாரலும்: பூமணியின் வெக்கை நாவல் பதினைந்து வயது சிறுவன் செய்யும் ஒரு வஞ்சின கொலைக்கு பிறகான ஏழு நாட்களாக விரியும் கதை.  இதற்குள்ளாக அந்நிலத்தின் விவரிப்புகள், உறவுகளின் பாசப் பிணைப்புக்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என ஒரு அழகிய உலகை படைத்து காட்டிருக்கிறார் பூமணி. 'அசுரன்' படத்தில் உள்ளதில் ஒரு சதவீத வன்முறை கூட இந்நாவலில் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். அத்திரைப்படம் ஒரு வகையில் உணர்ச்சியைத் தூண்டி 'அவன அடி! கொல்லு!!' என்று பார்வையாளர்களைச் சொல்ல வைப்பதாக இருக்கும். ஆனால் இந்நாவல் முடிவை நோக்கிச் செல்ல செல்ல மனம் ஒரு அலாதியான நிறைவை அடைகிறது. சிதம்பரம் கண்களின் வழியே நாம் காணும் அந்த நிலம் மிக ரம்மியமாகவும் நுட்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அதை முழுக்க உள்வாங்கி spontaneousஆக செயல் படுபவனுக்கு அந்நிலம் வேண்டிய நேரத்தில் உணவும் நீரும் அளித்து பொத்தி பாதுகாக்கிறது. தாயை அறிந்த மகனுக்கு கிடைக்கும் சலுகைகள் போல. 150 பக்கமே உள்ள சிறிய நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஆழமும் தனித்துவமும் மிக்கதாய் உள்ளன.  சிதம்பரம் - அய்யா சிவசாமி - அம்மா - கொலை செய்யப்பட்ட அவன