Posts

Showing posts from July, 2020

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

Image
An Excerpt from 'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி. மோகன். --------------------- நம் காலத்தின் பெறுமதிமிக்கக் கலைகளில் ஒன்றான நவீன ஓவியம், இன்றளவும் நம்மிடையே அதிகமும் அறியப்படாத, பிடிபடாத புதிர்ப் பிரதேசம். இதன் காரணமாக, சிந்தனைகளிலும் அழகியலிலும் நம்மை மேம்படுத்தக்கூடிய செழுமையான அனுபவங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். பொதுவாக, இன்றைய பிற கலைச் சாதனங்களோடு ஆர்வமுடன், ஈடுபாட்டுடன், முனைப்புடன் இயங்கும் பலரும்கூட, நவீன ஓவியம் குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு கேலிப் பொருளாகப் பார்த்து நையாண்டி செய்யும் மனோபாவமும் இருக்கிறது. நம்முடைய சமகாலத்தில் சில தமிழ்த் திரைப்படங்கள், நவீன ஓவியத்தை நகைச்சுவைக் காட்சிக்கான ஒரு பொருளாகவே பயன்படுத்தியிருக்கின்றன. நவீன ஓவியம் என்பது ஒரு பேத்தல் வேலை என்றும், அதை ரசிப்பதாக பாவனை செய்பவர்கள் பம்மாத்துப் பேர்வழிகள் என்பதுமான எண்ணத்தை வெகு மக்களிடம் உருவாக்கும் கைங்கரியத்தை அவை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகின்றன. ஒரு கலை சார்ந்த படைப்பாளிகள், இன்னொரு கலை சார்ந்த படைப்பாளிகளை எவ்விதப் புரிதலும் இல்லாமல் நையாண்டி செய்வ

வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், இன்று மழைப்பாடல் வாசித்து முடித்தேன். வெண்முரசு வாசகர்கள் அனைவரும் பாண்டவர்களின் மறைவுக்கு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நான் பாண்டுவின் மரணத்திற்கு கண்ணீர் விடுகிறேன். தவளைகளின் இறைஞ்சல் போல என் மனம் முழுக்க நாவலின் பல்வேறு  தருணங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உண்மையாகவே இந்நாவல் என்னை உச்சத்திற்கு கொண்டு சென்று அப்படியே சிதறடித்து விட்டது. எவ்வளவு வாழ்க்கைகள், நிகழ்வுகள், உச்சங்கள், சரிவுகள், பிறப்புகள், இறப்புகள், நிலகாட்சிகள்.  பாத்திர படைப்புகளை கருப்பு வெள்ளை என்று பகுக்காமல் சாம்பல் பகுதியின் வெவ்வேறு அழுத்தங்களில் உள்ளதால் அனைத்தையும் மிக நெருக்கமாக உணரமுடிகிறது. பாலைநில போர்வீரன் சகுனி தன் தமக்கைகாக நெகிழும் போதும் பீஷ்மரை கட்டிப்பிடித்து கண்ணீர் விடும் போதும் அப்பாலை நிலத்தில் ஊரும் ஒற்றை கிணற்றை கண்டேன். குந்தியின் அறிமுக காட்சியே அபாரம். யாதவ பெண்ணிலிருந்து அரசியாக, கணவனுக்கு தாயாக, மதியூகியாக அவளின் பாத்திரப்படைப்பு பிரம்மிக்க வைக்கிறது. அவள் தன் இடம் உணர்ந்து அதை தக்கவைத்து கொள்ளவே முதலில் விழைகிறாள். ஆனால், எதிர்பாராமல் தேவயானியின் மணி