Posts

Showing posts from May, 2020

வெண்முரசு - களிற்றியானை நிரை : சிறு குறிப்பு

களிற்றியானை நிரை : தொல்நகரின் எழுச்சி. வெண்முரசு நாவல் வரிசையில் 24 ஆவது நாவலான களிற்றியானை நிரை அஸ்தினபுரியின் எழுச்சியை காட்டுகிறது.  ஆதன் என்ற தென்குமரி நிலத்தவன் 'அஸ்தினபுரி' என்ற சொல்லின் ஆணையால் தன்னகர் நீங்கி செல்கிறான். அவன் மட்டும் அல்ல அனைத்து திசைகளிலும் அஸ்தினபுரி மக்களை அழைக்கிறது. அஸ்தினபுரியின் தொல்குடிகள் நகர் நீங்குகிறது. ஆள் அரவமே இல்லாத நிலையில் அனைத்து நீர்க்கடன்களையும் முடித்து யுதிஷ்டிரன் நகர் புகுகிறார்.  சம்வகை, சுரேசர், யுயுத்சு சேர்ந்து நகரை மீட்கிறார்கள்.  அஸ்தினபுரி யின் தொல் யானைகள் நகரை நிறைக்கும் காட்சி ஒரு உச்சம். தொல்குடிகள் அகல புதுவெள்ளம் போல் புதுமக்கள் நகரை நிறைகிறார்கள். அவர்களின் வழியே சென்று நுட்பமாக ஆட்சி புரிகின்றன ஆட்சியாளர்கள்.  நான்கு தம்பியர் நான்கு திசை நோக்கி சென்று வென்று நகர் அரசருக்கு பரிசுகளுடன்(Hammurabi code, oyster, ladakh crystal, The last word Bird)  பாபிலோனிய தொல்கதைகளும் இடம்பெறுகிறது. மற்றொரு அமைச்சர் சாரிகர் துவாரகை செல்கிறார். உத்தரைக்கு பரிட்சீத் குறைமாத்தில் பிறக்கிறான், பீதர் நாட்டினர் அவனை சிப்பியில் வைத்து காக்க

உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்: சிறு குறிப்பு.

உறுபசி - கல்பொருசிறுநுரை  சம்பதின் மறைவிற்கு பிறகு அவனது நண்பர்கள் வழியே சிதறிய நினைவுகளாக அவனது வாழ்வு சொல்லப்படுகிறது.  அழகர், ராமதுரை, மாரியப்பன், யாழினி, ஜெயந்தி இவர்கள் ஐவரும் கண்ட சம்பத் தன்னை ஒரே நேரத்தில் ஈர்க்கவும், விலக்கவும், வெறுக்கவும் செய்பவனாக உள்ளான். செடிகளை விற்க மறுப்பவன், தீப்பெட்டி தீக்குச்சிகளை விரும்புபவன், சதா சிந்தனை செய்பவன் போன்ற வித்யாசமான குணங்களை கொண்டவன்.  தன்னை ஒரு கள்ளிச்செடி என்றும் அணைப்பவர்களை காயப்படுத்துவேன் என்றும் நினைக்கிறான்.  பலகோடி நட்சத்திரங்கள் இருக்கும் வானில் ஒரு எரிக்கல் போல் பிரகாசமாக ஒளிர்ந்து அணைகிறான். தீக்குச்சி போல் எரிந்து முடிகிறான். கல்பொருசிறுநுரை போல் பொங்கி அமிழ்கிறான்.

இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் : நாவலனுபவம்

..எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல்..  || தானே உலரும் கண்ணீர் || சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும், அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றி தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது.   இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல்.  அத்தோடு மட்டும் இந்நாவலைக் குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டுச் சென்றுள்ளது. முகலாய பேரரசரான அவுரங்கசீபின் இறுதிக் காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்த கொடுந் தனிமையை அவுரங்கசீபும் அனுபவிக்கிறார். இளமையில் மரணத்தைத் துச்சமாக நினைத்துப் பல வெற்றிகளை ஈட்டும் அவுரங்கசீப், இறுதியில் தன் ஆத்மார்த்தமான ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் இறக்கிறார். பிஷாட மன்னன் ஆட்சி செய்யும் சத்கரில் தூமகேது என்று  கடைநிலை துப்புரவுத் தொழிலாளி , செய்யாத ஒரு குற்றத்திற்காகக் கைதாகிறான். 'காலா' என்ற ஒரு சிறை நகரில் அவனை அடைக்கிறார்கள். அவனைப் போல் பலர் செய்யாத குற்றத்திற்காகக் கைதாகிப் பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். பி

விரியும் விதைகள் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், தினமும் கதைகள் வெளியாவதால் அவற்றிக்கு இடையே உள்ள தொடர்புகளை, பொதுத்தன்மைகளை தான் மனம் தானாக தேடுகிறது. அதுபோல, நேற்று இரவு ஒரு எண்ணம் தோன்றியது. வெளியான கதைகளில் வரும் ஒயரால் கூடு கட்டும் குருவி(குருவி), மின் கம்பியில் விடபிடியாய் கிறங்கி கிடக்கும் மலைப்பாம்பு(லூப்), ஊருக்குள் நுழைந்து மனிதர்களோடு சேர்ந்து குடிக்கும் குரங்கு(இடம்), மலைச்சாலையில் டீசல் முகர்ந்து நிற்க்கும் யானைகள்(அங்கி) என்று வரும் விலங்குகள் மனித நவீன நாகரீகத்திற்குள் நுழைகின்றன. இப்பட்டியலில் வீட்டிற்குள் நுழையும் ‘ஆனையில்லா!’ யானையையும் சேர்க்கலாம். இவை ஏன் இங்கு வருகின்றன?கூடுகட்ட நார்கள் கிடைக்கவில்லையா குருவிக்கு? அவ்வளவு அழுத்தமாக, மின் கம்பியை விட்டு ஏன் செல்ல மறுக்கிறது அந்த மலைப்பாம்பு? ஊருக்குள் நுழைந்தத்திற்கு அந்த குரங்கு கூறும் காரணம் என்ன? இவற்றில் பெரும்பாலானவற்றை (பாம்பு, குரங்கு) மனிதன் முதல் விலக்கவே பார்க்கிறான். பின்னர் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். அந்த விலங்குகள் தன் இனத்தின் இயல்பை மீறி வேறொன்றிக்குள் வருகின்றன. தங்களை Adapt செய்து கொள்கின்றன.ஒயரால் தன் கூட்டை கட்டிய குருவி நாளை அ

மலைகளின் உரையாடல் [சிறுகதை] - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், மலைகளின் உரையாடல் [சிறுகதை] ‘மலைகளின் உரையாடல்’ வாசித்தேன். கதையின் களம் ‘குருவி’ சிறுகதையின் தொடர்ச்சியாக இருந்தாலும் இதன் கரு ‘விசும்பு’ கதையின் நீட்சியாக எனக்கு படுகிறது. ஒரு சிறு பறவைக்கும் மற்ற உயிரினங்களுக்குமான தொடர்பை விசும்பு பேசுகிறது. (ஒரு பறவை இனத்தின் திசை மாற்றம், மற்ற பறவைகளின் திசையை பாதிக்கிறது, மீன்களும் திசை மாறி பயணிக்கிறன.)அறிவியலின் எல்லைகளையும் கூறுகிறது. மலைகளின் உரையாடல் இயற்கையின் அஃறிணைகளுக்கு இடையேயான தொடர்பை கூறுகிறது. ஒரு குருவி கட்டிய கூட்டில் மனிதன் மின்சாரம் செலுத்தும் போது எவ்வித எதிர்வினைகளும் இல்லை. ஆனால் அக்கூடு வானின் மின்னைலுக்கு பதிலுரைகிறது. இடி முழக்கம், மலைகளுடன் உரையாடுகிறது. வான் மின்னல், குருவி கூட்டுடன் உரையாடுகிறது. இடியும் மின்னலும் மேகங்களின் உரையாடலில் பிறக்கிறது. அக்குருவி கூட்டினை போலவே ஒரு மாபெரும் இயற்கையின் பின்னலை, ஒரு ஓயாத உரையாடலை இக்கதை உணர்ந்துகிறது.மிக அற்புதமான கதை. ஒரு சிறுகதையை வாசித்து முடித்து பின்னர் அதன் தலைப்பை பார்ப்பது ஒரு அனுபவத்தை தரும். ஆனால் இக்கதையின் தலைப்பு ஒரு பெரும் விரிவை நோக்கி செல்லாம

ஜெயமோகன் சிறுகதைகள் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், இன்று ஒரு அருமையான ஞாயிறு. காலை தளத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றுமொரு ஒளசெபச்சன் கதை. கைமுக்கு பற்றி பேச ஆரம்பித்து – திருடர்கள் – போலீஸ்கள் – மாணவர்கள் – என பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்து மீண்டும் கைமுக்கில் ஒரு திருப்பதுடன் முடித்துள்ளீர்கள். எவ்வளவு பெயர்கள் Dostoyevsky  முதல் சுந்தரராமசாமி வரை. ஒளசெபச்சன் வரிசை கதைகளை வாசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது. ஒரு வீடியோவில் இருவர் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே tennis விளையாடுவார்கள். அதுபோல, நீங்கள் நாகர்கோவிலில் இருந்து கதையின் வரிகளாக பந்தை அடிக்கிறீர்கள், நாங்கள் தடுமாறி அதை திருப்பிடிக்கிறோம். அடுத்த வரி எதிர்பாரத ஒரு வேகமாக வருகிறது, நாங்கள் அதை நோக்கி ஓடுகிறோம். ‘ஆகா, மாட்னாங்கடா!’ என்று முகம் முழுக்க புன்னகையுடன் நீங்கள் கதை எழுதுவது இங்கே தெரிகிறது. பிறகு, படிக்காமல் விட்ட மாய்ப்பொன், உலகெலாம் கதைகளை படித்தேன். ஒன்று நிலவே கீழிறங்கி, கடுவனும் காட்டை விட்டு நேசயன்னை நோக்கி வரும் கதை. உலகம் அவனை நோக்கி குவிகிறது.மற்றொன்று தன் எமனை நேருக்கு நேர் எதிர் கொண்டதால்  உலகம் நோக்கி விரியும் கதை. இரண்ட

எழுகதிர் [சிறுகதை] - கடிதம்

எழுகதிர் [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், எழுகதிர் ஒரு மாபெரும் கேன்வாஸில் நிகழும் கதை. கதாநாயகனின் நண்பன் வழியாக கதை சொல்லப்படுவதால் ஒரு சிறுகதை வடிவத்தை அடைந்துள்ளது. ஸ்ரீ யின் பார்வையில் நிகழ்ந்தால் எத்தனை சாகசங்கள், எத்தனை ததள்ளிப்புகள், எத்தனை அழைகளைப்புகள். அது ஒரு நாவலின் களமாக விரிய கூடியது. ஸ்ரீ யின் பார்வையில் நினைக்கவே திகிலாக உள்ளது. {பின்தொடரும் நிழல் வீரபத்ரனை போல்!} வாசிக்கும் போதே இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முற்படும் போது கதையில் ஒரு திருப்பம் வருகிறது. ஸ்ரீ இடம் உள்ள அருண பிந்துவை பறித்து கொள்கிறார்கள், அது வெறும் கூழாங்கல்லாக உள்ளது(அர்ஜுனன் எடுத்த அஸ்வத்தாமனின் நுதல் மணி போல்). ஸ்ரீ யே அம்மணியாக மாறி கிழக்கே சென்று கொண்டே இருக்கிறான். கதையின் முடிவு ஒரு உச்சம். அவன் மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் என்று சென்று கொண்டே இருக்கிறான்.கிழக்கே அருணனை நோக்கி! (ஏழு எட்டு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ ஜகார்த்தாவில் தென்படுகிறான். ஒருவேளை அது இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றாக இருக்குமோ??!!) தங்கள், கிஷோர் குமார்.

ஏகம் [சிறுகதை] - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், ஏகம் [சிறுகதை] ஏகம் ஒரு அழகான சிறுகதை. அதன் அளவு சிறியதாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவது. காரில் திருமணத்திற்கு செல்லும் ஒரு சிறு எழுத்தாளர் கூட்டத்தின் உரையாடலிலிருந்து கதை தொடங்குகிறது. ஜே.கே மீது அவர்களுக்கு ஒரு aversion உள்ளது. ‘கருத்துநிலை கதைகள்’ என்று கோபாலன் சொல்கிறான். அவர்கள் வேறொரு உலகில் வாழ்கிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு வரும் மக்களின் மனநிலை, உரையாடல் ஆகியவற்றை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஜே.கே – திருமணம் – பெருமாள் என இவர்கள் உரையாடல் நீடிக்கிறது. இவர்கள் தான் புல்லாங்குழல் வாசிக்கும் மணியை சற்று நேரத்தில் கவனிக்கிறார்கள். சுற்றி உள்ள பொன்வண்டுகளுக்கும் பட்டுவேட்டிகளுக்கும் அவ்விசை ஒரு பொருட்டே அல்ல. ஆனால் ஜே.கே வந்த உடனே அந்த இசையை அடையாளம் காண்கிறார். யானையின் வழித்தடம் உருவாகி , அனலென அமர்கிறார். ‘கருத்துநிலை எழுத்தாளரும்’ புல்லாங்குழல் இசைஞனும் சந்தித்து, உரையாடி, விடைபெருவது ஒரு கவித்துவ நிகழ்வு. அந்நிகழ்வு கூட சுற்றியுள்ள கூட்டத்திற்கு புரிய வில்லை. வண்ணவிளக்குகள் ஒளிர்ந்த நகரத்தெரு. முட்டிமோதும் மனிதர்கள். மிதந்தலையும் முகங்க

வாசிப்பும் விமர்சனமும் - கடிதம்

Image
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலமா? விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு என் வாழ்த்துக்கள். அருளாளர் விருது பெறவுள்ளத்திற்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் கழித்து தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஜேஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்து முடித்தேன். மிக சிறந்த வாசிப்பாக அது அமைந்தது. ஆல்பெர் காம்யுவை பற்றி அவர் மறைந்த பின்னர் நிகழும் இரங்கல் கூட்டத்தின் மூலமே பாலு  அறிவான். அது போல நான் சுந்தர ராமசாமியை தங்கள் ‘நினைவின் நதியில்’ புத்தகத்தின் மூலமே அறிந்தேன். அதற்கு நன்றி கூற விழைகிறேன். நான் எனது வாசிப்பு அனுபவத்தை என் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளேன். அதன் சுட்டியை தங்களுக்கு இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். நன்றி. தங்கள் அன்புள்ள, கிஷோர் குமார்.   ஜே.ஜே: சில குறிப்புகள் – நாவலனுபவம் அன்புள்ள கிஷோர் நீங்கள் ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றி எழுதிய விமர்சனத்தை வாசித்தேன். இன்றைய சூழலில் அதை ஒரு இலக்கியச்சிபாரிசு என்றுதான் சொல்லமுடியும் இல்லையா? நான் வாசித்தேன், நன்றாக இருந்தது, நீங்களும் வாசிக்கலாம்- அவ்வளவே. ஆனால் விமர்சனம் என்பது வேறு. அதற்கான அளவுகோல்கள் சில உண்டு. ஏற்கனவே நான் எழுதி

திருச்சி இலக்கியம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், தங்கள் கடிதம் கிடைத்தது. நலமுடன் இருக்கிறேன். தாங்கள் அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றி. தாங்கள் கூறியபடி ஒரு படைப்பு தரும் அனுபவத்தை விரிவாக எழுத முயற்சி செய்கிறேன். நான் திருச்சியில் வசிப்பவன். இங்கு இலக்கிய, வாசிப்பு குழுக்கள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும். ஏனென்றால் இலக்கியம் சார்ந்து உரையாட எனக்கு யாரும் இல்லை. கடிதம் மூலம் தங்களுக்கு எழுதுவதோடு சரி. நன்றி. தங்கள், கிஷோர் குமார் *** அன்புள்ள கிஷோர்குமார் திருச்சியில் வாசகசாலை போன்ற அமைப்புக்கள் கூட்டங்கள் நடத்துகின்றன என நினைக்கிறேன். திருச்சியில் நடக்கும் கூட்டங்களை சில அரைவேக்காட்டு ஆசாமிகள் நடக்கவிடாமல் பேசிக்குலைக்கும் செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய அங்கே உருப்படியாக ஒரு கூட்டம் நடந்ததாக நான் சென்ற பல ஆண்டுகளில் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை அதனாலேயே பலரும் சோர்ந்து ஒதுங்கிக்கொண்டிருக்கலாம் ஜெ *** 05-09-2019

விஷ்ணுபுரம் - நாவலனுபவம் - கடிதம்

Image
அன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுரம் வாசித்த பின்னர்  ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது. விஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் “பத்மபுராணம்” சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து, விவரித்து, மறுத்து, ஆதரித்து, விளக்கியும் உள்ளீர்கள். அது வாசகர்களை பெரும் உவப்பிற்குள்ளாக்குகிறது. இப்படி ஒரு மாபெரும் கனவை, ஒரு காவிய நகரை எழுத்தை தூரிகையாக்கி வாசகர்களின் மனதுள் தீட்டி, அதனை முப்பரிமாண உலகம் என்று நம்பவைத்து, பின்னர் அதே எழுத்தை கடப்பாரையாக்கி ஒவ்வொரு சிற்பமாய், ஒவ்வொரு தூணாய், ஒவ்வொரு கோபுரமாய்  உடைத்து எறிந்து இறுதியில் நீங்களே அக்கரிய சிலையாகி புன்னைகைக்கும் போது வாசகர்கள் மனதுள் ஏற்படும் வெறுமையும், அவர்களின் பெருமூச்சுமே இந்நாவலை காவியமாக நிலைநிறுத்துகிறது. முதல் பகுதி வழுக்கிக்கொண்டு நான்கே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அதன் பின்னர் ‘கௌஸ்தூபம்’ கடினமாக இருந்தது. தத்துவ விவாதங்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு இந்துத்துவர் என்பவர்களுக்கு அந்த ‘ஊட்டுபுரை’ பகுதியை வாசித்து காண்பித்தாலே போதும். அவர்கள் அளறிவிடுவார்கள்! விஷ்ணுபு

விஷ்ணுபுரம் - கொந்தளிப்பு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,   ஒரு வாரமாக விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். நீங்கள் வாசகர்களுக்கு மிக அதிகமான வேலை தருக்கிறீர்கள், அதனாலே உங்கள் படைப்புக்கள் அதற்கான வாசகர்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. ஸ்ரீபாதம் முடிந்த பின்னர் ஏதோ வெறுமையை மிஞ்சியுள்ளது. எத்தனை விதமான கதாப்பாத்திரங்கள். அனைவரையும், அனைத்தினையும் விஷ்ணுபுரம் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நான் மிகவும் ஆரம்ப நிலை வாசகன், எண்ணெய்யே விஷ்ணுபுரத்தின் கணவுநிலையும் அதன் கட்டற்ற தன்மையும் ஈர்த்து கவர்கிறது என்றால் தேர்ந்த வாசகர்களை எவ்வளவு படுத்தி இருக்கும். உங்களுக்கு வந்த விஷ்ணுபுரம் கடிதங்களை வாசித்தாலே அவர்களின் தவிப்பு புரிகிறது. விஷ்ணுபுரத்தை முழுவதும் வாசித்த பின்னர் உங்களுக்கு நீண்ட கடிதம் எழுத விரும்புகிறேன். மேலும் உங்கள் பதிவுகள் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றன ஒரு ஆற்றாமையை, கையலாக நினைப்பை ஏற்படுத்துகின்றன. என்னதான் வேண்டும் ஸ்வாமி நிகமானந்தவிற்கு, எது மாத்ரி சதன் துறவிகளை முன்செலுத்துகிறது. நன்றாக வாழ வேண்டியது தானே. நான் மிகவும் சுயநலமானவன் என்னை தவிர எதைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை. காந்தி, அண்ணா ஹசாரே,   நிகமானந்தா பற

முதல் கடிதம்

வணக்கம் ஐயா, நான் உங்களது வாசக குழந்தைகளுள் ஒருவன். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றேன். உங்கள் வலைப்பக்கத்தை ஒரு சில மாதங்களாக வாசித்து வருகின்றேன். பல முறை கடிதம் எழுத மனதால் முயன்று கைவிட்டுருக்கின்றேன். இன்று “எழுதுக!” பதிவை படித்தவுடன் எழுதுகின்றேன். எப்படி உங்கள் அறிமுகம் கிடைத்தென்று எனக்கு நினைவில்லை, ஆனால் என் வாழ்வின் சிறந்த தருணங்களுள் அது ஒன்றாக அமைந்தது என்பது மிகையற்ற உண்மை.நான் மிக குறைவான வாசிப்பை உடையவன்,எனக்கு இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், உங்கள் மொழியின் ஆளுமை மெய்சிலிர்க்க வைக்கின்றது, குறிப்பாக “அறம்” சிறுகதை தொகுப்பு  என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்கு ஒரு பாதிரியாரை பார்த்தாலும் “Fr.Dr.Sommervell”ன் ஞாபகமும், உணவு விடுதியில் யாராவது ஒரு பெரியவரை கண்டால் “சாகிப்பு” அவர்களின் ஞாபகமும் தான் வருகிறது. அதன் பின்னர் உங்கள் “இரவு” நாவலை வாசித்தேன் இருட்டை பற்றிய ஒரு புதிய பார்வையை எனக்கு தந்தது அந்த நாவல். தற்போது “நீர்கூடல் நகர்” பதிவை படித்து முடித்து “இந்திய பயணம்” நூலை வாங்கியுள்ளேன். திருட்டுத் தனமாக “PDF” நூல்களை தரவிறக்கம் செய்வது தான்