மலைகளின் உரையாடல் [சிறுகதை] - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

‘மலைகளின் உரையாடல்’ வாசித்தேன். கதையின் களம் ‘குருவி’ சிறுகதையின் தொடர்ச்சியாக இருந்தாலும் இதன் கரு ‘விசும்பு’ கதையின் நீட்சியாக எனக்கு படுகிறது.

ஒரு சிறு பறவைக்கும் மற்ற உயிரினங்களுக்குமான தொடர்பை விசும்பு பேசுகிறது. (ஒரு பறவை இனத்தின் திசை மாற்றம், மற்ற பறவைகளின் திசையை பாதிக்கிறது, மீன்களும் திசை மாறி பயணிக்கிறன.)அறிவியலின் எல்லைகளையும் கூறுகிறது.

மலைகளின் உரையாடல் இயற்கையின் அஃறிணைகளுக்கு இடையேயான தொடர்பை கூறுகிறது. ஒரு குருவி கட்டிய கூட்டில் மனிதன் மின்சாரம் செலுத்தும் போது எவ்வித எதிர்வினைகளும் இல்லை. ஆனால் அக்கூடு வானின் மின்னைலுக்கு பதிலுரைகிறது. இடி முழக்கம், மலைகளுடன் உரையாடுகிறது. வான் மின்னல், குருவி கூட்டுடன் உரையாடுகிறது. இடியும் மின்னலும் மேகங்களின் உரையாடலில் பிறக்கிறது.

அக்குருவி கூட்டினை போலவே ஒரு மாபெரும் இயற்கையின் பின்னலை, ஒரு ஓயாத உரையாடலை இக்கதை உணர்ந்துகிறது.மிக அற்புதமான கதை.

ஒரு சிறுகதையை வாசித்து முடித்து பின்னர் அதன் தலைப்பை பார்ப்பது ஒரு அனுபவத்தை தரும். ஆனால் இக்கதையின் தலைப்பு ஒரு பெரும் விரிவை நோக்கி செல்லாமல் உள்ளதாக படுகிறது. விசும்பை போலவே கதை ஒரு பரந்த தரிசனத்தை கொடுத்தாலும், இதன் தலைப்பு ‘மலைகளுக்கு இடையேயான உரையாடலை’ மட்டும் குறிப்பிட்டு குறுகுகிறது.  மறுவாசிப்புகளில் அதன் பிடி கிடைக்கலாம்.

தங்கள்,

கிஷோர் குமார்.

திருச்சி.

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

இயற்கையை அறிதல் - எமர்சன்