விரியும் விதைகள் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

தினமும் கதைகள் வெளியாவதால் அவற்றிக்கு இடையே உள்ள தொடர்புகளை, பொதுத்தன்மைகளை தான் மனம் தானாக தேடுகிறது. அதுபோல, நேற்று இரவு ஒரு எண்ணம் தோன்றியது.

வெளியான கதைகளில் வரும் ஒயரால் கூடு கட்டும் குருவி(குருவி), மின் கம்பியில் விடபிடியாய் கிறங்கி கிடக்கும் மலைப்பாம்பு(லூப்), ஊருக்குள் நுழைந்து மனிதர்களோடு சேர்ந்து குடிக்கும் குரங்கு(இடம்), மலைச்சாலையில் டீசல் முகர்ந்து நிற்க்கும் யானைகள்(அங்கி) என்று வரும் விலங்குகள் மனித நவீன நாகரீகத்திற்குள் நுழைகின்றன. இப்பட்டியலில் வீட்டிற்குள் நுழையும் ‘ஆனையில்லா!’ யானையையும் சேர்க்கலாம்.

இவை ஏன் இங்கு வருகின்றன?கூடுகட்ட நார்கள் கிடைக்கவில்லையா குருவிக்கு? அவ்வளவு அழுத்தமாக, மின் கம்பியை விட்டு ஏன் செல்ல மறுக்கிறது அந்த மலைப்பாம்பு? ஊருக்குள் நுழைந்தத்திற்கு அந்த குரங்கு கூறும் காரணம் என்ன?

இவற்றில் பெரும்பாலானவற்றை (பாம்பு, குரங்கு) மனிதன் முதல் விலக்கவே பார்க்கிறான். பின்னர் அவற்றை ஏற்றுக்கொள்கிறான்.

அந்த விலங்குகள் தன் இனத்தின் இயல்பை மீறி வேறொன்றிக்குள் வருகின்றன. தங்களை Adapt செய்து கொள்கின்றன.ஒயரால் தன் கூட்டை கட்டிய குருவி நாளை அலைபேசி டவரில் தன் வீட்டை கட்டினாலும் கட்டும் போலும்!

“வாழ்வை சித்தரிப்பது அல்ல என் கதைகள், அவற்றின் அடிப்படையை ஆராய்வது” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அவை மனித வாழ்வையும் கடந்ததாக எனக்கு படுகிறது. உங்கள் கதைகள் எண்ண எண்ண விரியும் விதைகளாக உள்ளது.

தங்கள்,

கிஷோர் குமார்.

திருச்சி.

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

இயற்கையை அறிதல் - எமர்சன்