ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

தமிழின் மிக முக்கிய நாவல்களுள் ஒன்றான ஜேஜே: சில குறிப்புகளை நான்கு மாதங்களுக்கு முன் மிக ஆர்வத்துடன் வாங்கி , எப்போதும் கதைகள் வசிப்பது போல் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். படித்து முடித்து மூடி வைக்கும்போது
"சரி okay. இப்ப இந்த நாவல் என்ன சொல்ல வருது? சரளமான கவித்துவமான மொழி இருக்கு ஆனா கதை என்ன ?"
 என்ற கேள்வியுடனும் குழப்பத்துடனும் புத்தகத்தை மூடி ராக்கில் வைத்துவிட்டேன்.
Image result for jj sila kuripugal

இந்நூலின் பின்னுரையில் சுகுமாரன் கூறுவதைப் போல் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட தமிழின் நவீன நாவல் இதுவே. எக்கச்சக்கமான விமர்சனங்கள், வாசிப்பனுபவங்கள் இணையத்தில் குவிந்துள்ளது. தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஜெயமோகன் இதனை பட்டியலிட்டுள்ளார். மேலும் அவரது "சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்" என்னும் நூலில் ஒரு பத்து பக்கத்திற்கு ஒரு முறையாவது இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தையும் , இதன் மதிப்பையும் பற்றி கூறியுள்ளார். நமக்கு மட்டும் ஏன் இது சாதாரணமாக தெரிகின்றது என்று சலிப்புடன் இதை ஒதுக்கி வைத்துவிட்டேன்.
Image result for sundara ramaswamy ninaivin nathiyil
Image result for sundara ramaswamy
Sundara Ramasamy

பின்னர் ஒருநாள் யுவன் சந்திரசேகர் எழுதிய 'கானல் நதி'யில் வரும் கதாநாயகனின் (தனஞ்சய முகர்ஜி) டயரி குறிப்புகளை படித்துக்கொண்டிருந்த போது ஜேஜே யின் நியாபகம் வந்தது. சரியென்று கானல் நதி முடித்த கையோடு ஜேஜே : சில குறிப்புகளை (மீண்டும்) வாசிக்க தொடங்கினேன்.
Image result for kaanal nadhi yuvan

முன்பு போலவே இப்போதும் என்னை வசீகரித்தது இதன் மொழியே. "மேகங்களை கலைப்பவன் ஜேஜே"
 என்ற வரியில் நான் நின்று விட்டேன். இந்நாவலை இதன் மொழிக்காகவே வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதானமாக வாசித்தேன். மிக மிக நேர்த்தியுடனும் 'சவரக்கத்தியின் கூர்மையுடனும்' சுந்தர ராமசாமியால் இந்நாவல் செதுக்கப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர்களுக்கு ஜேஜே நிச்சயமாக ஆதர்ச நாயகனாகி விடுவான். மேலும் இந்நாவல் முழுக்க நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அங்கதமும் பகடியும் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது.

ஜேஜே வை மைய அச்சாக வைத்து அவனை சுற்றியுள்ள சமூகத்தை ஜேஜே மூலமாகவே விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். முற்போக்கு எழுத்து, பெண் எழுத்து, நவீன எழுத்து, வணிக எழுத்து போன்ற எழுதுமுறைகள், நிறுவன அமைப்பு, அரசியல் அமைப்பு, இலக்கிய அமைப்பு, சமூக அமைப்பு போன்ற அமைப்புகள், பெற்றோர், மனைவி, நண்பன், ஆசிரியர் போன்ற உறவுகள் என அனைத்தையும் ஜேஜே வின் கண்கள் மூலம் எள்ளலுடனும் விமர்சனதுடனும் காட்சிகளாக விரித்தெடுக்கிறார் சுந்தர ராமசாமி.

இந்நாவலின் முதற்பகுதி முழுக்க பாலு என்ற தமிழ் எழுத்தாளர் பேசிக்கொண்டே இருக்கிறான்.
"யார் ஜேஜே? அவன எப்படி தெரியும்? அவன் என்னாலா செஞ்சிருக்கான்? " என்ற கேள்விகளுக்கு ஒரு நாள் முழுக்க சகபயணி போல் ஜேஜேவை பற்றி பேசிக்கொண்டும், அவன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொண்டும் வருபவனாகவே என்னால் பாலுவை பார்க்க முடிகிறது.
ஜேஜேவின் டைரி குறிப்புகளாக விரியும் இதன் இரண்டாம் பகுதி மேலும் செறிவுடனும் கவித்துவதுடனும் பின்னப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வருடத்தில் நாற்பது ஆண்டுகளை (1981) கடக்க போகும் இந்நாவல் இன்றும் தமிழ் வாசகர்களால் பெரிதும் கொண்டாட படுகிறது. சராசரி மொழி, சராசரி கூறுமுறை, சராசரி கதாநாயகன், சராசரி பார்வை என அன்றாடம் புழங்கிவரும் அனைத்தையும் மீறி இந்நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் இந்நாவல் என் வாசிப்பு வரிசையில் மிக முக்கிய நாவல்.

""எந்த முத்திரை வேண்டுமானாலும் என் மீது குத்தப் படட்டும். நம்பிக்கைவாதி என்றோ, அவநம்பிக்கைவாதி என்றோ, முற்போக்குவாதி என்றோ, பிற்போக்குவாதி என்றோ, சமூக அழிவிற்கு காரணமானவன் என்றோ எனக்கு பெயர் சூட்டட்டும். அனைத்தும் ஒன்றாகப்படும் இடத்திற்கு நான் போய்ச் சேரவேண்டும். ஒரு வித்தியாசம் முக்கியமானது. அது மட்டுமே எனக்கு முக்கியமானது. நான் உண்மை பேசுகிறேனா அல்லது பொய் பேசுகிறேனா என்பது.""

                                                                                            ஜோசப் ஜேம்ஸ் (ஜேஜே)


Comments

  1. நான் பட்டம் படிக்கும் போது படித்தது சென்னையில் உள்ள ஆசன் மெமோரியல் பள்ளிக்கு வந்தவரை நேரில் சென்று பார்த்தேன் காரணம் ஈர்ப்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

இயற்கையை அறிதல் - எமர்சன்