Posts

Showing posts from June, 2021

இயற்கையை அறிதல் - எமர்சன்

  எமர்சனின் இயற்கையை அறிதல் (தமிழில்: ஜெயமோகன்) பாஸ்டனில் ரால்ஃப் வால்டோ எமர்சனின் வீட்டுக்குச் சென்றபோது மிகப்பெரிய ஓர் உள எழுச்சியை அடைந்தேன். அங்கே நின்றிருக்கவே முடியாத அளவுக்கு.  விழிகளில் நீர்கசிவது எல்லாம் என் இயல்பல்ல, ஆகவேதான் அழவில்லை.  ஆனால் அந்தத் தருணத்தை ஒவ்வொரு கணமும் என என்னால் உணரமுடிகிறது இன்று.  - ஜெயமோகன் ( மரபை கண்டடைதல் ) இயற்கையை அறிதல் புத்தகத்திலிருந்து சில வரிகள் : நட்சத்திரங்கள் மட்டும் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை ஒரு இரவுக்கு மட்டும் தோன்றுமென்றால் மனிதர்கள் அதை எந்த அளவிற்கு விரும்பியிருப்பார்கள்? அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் கண் உள்ளவனுக்கு மட்டும் உரிமையான ஒரு நிலம் தொடுவான் வரை உள்ளது. சூரியன் மனிதர்களின் கண்களை மட்டுமே ஒளி பெறச் செய்கிறது. ஆனால் குழந்தையின் கண்ணையும் இதயத்தையும் அது சுடரால் நிரப்புகிறது. இயற்கையை நேசிப்பவன் யார்? எவனுடைய வெளிப்புலன்களும் உட்புலன்களும் பரஸ்பரம் சரியாக பொருந்திப் போகின்றனவோ அவன்தான். இயற்கையானது சோகக் காட்சிக்கும் நகைச்சுவைக் காட்சிக்கும் மிகச் சரியாக பொருந்தும் ஒரு நாடகப் பின்புலம். இயற்கை, மனிதனின் சேவையில் கச்சாப

ஜீவிதத்தின் கண்ணீரும் குருதியும்: அசோகமித்திரனின் தண்ணீர் நாவல்

வெகு நாட்களாக என் புத்தக அலமாரியில் வாசிக்கப் படாமலிருந்தது அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவல். சிறுநாவல் தானே இன்று வாசிக்கலாம் நாளை வாசிக்கலாம் என்று அப்படியே தள்ளிப்போய்விட்டது. இப்போது இதை வாசித்து முடித்தவுடன் ஒரு மேதையின் மாஸ்டர்ப்பீஸை இத்தனை நாள் தவறவிட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வைத்துவிட்டது. தண்ணீர் பஞ்சத்தில் அல்லற்படும் சென்னை நகரமே இந்நாவலின் கதைக்களம். தண்ணீருக்காக மக்கள் விடிவதற்கு முன்பிருந்தே தெருத்தெருவாக அலைகிறார்கள்.  'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கிணங்க மனதின் சமநிலை, குடும்ப அமைப்பு, சமூகச் சூழல், அரசாங்க செயல்பாடு என ஒவ்வொன்றும் எப்படி அமையாமல் அல்லற்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் காட்சிப்படுத்தும் நாவல். இக்கதையில் பெண்களே பிரதான பாத்திரங்களாக உள்ளனர். இருவேறு துயர வாழ்வினூடாக பயணப்படும் இரு சகோதரிகள் சாயா - ஜமுனா, வாழ்வின் குரூர உகிர்களைக் கடந்து துணிச்சலுடன் வாழும் டீச்சரம்மா, நோய்ப்படுக்கையில் மனம் பிறழ்ந்து கிடக்கும் ஜமுனாவின் தாய், இந்நாவலின் உச்ச கணத்தில் வரும் தெலுங்கு பிராமண கிழவி எனப் பெண்களின் வழியாகவே அக்காலகட்டத்தின் இருளை காட்சிப்படுத்

யதி : சன்யாசம் சிலாகிப்பு சறுக்கல்

பா. ராகவன் எழுதிய யதி நாவல் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொண்ட நான்கு சகோதரர்களின் கதை.  ஒரே வீட்டின் நான்கு சகோதரர்கள் வெவ்வேறு காலங்களில் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார்கள். இந்நால்வரும், தங்கள் தாயார் மரணத்தை நெருங்குவதை அறிந்து மீண்டும் சந்திக்கின்றன. பொதுவாகவே துறவு என்பது மனகொந்தளிப்பு சார்ந்தது. அகத்தில் நிகழும் கொந்தளிப்புகளுக்கு புறத்தே விடை தேடுவது. துறவு சார்ந்து எழுதப்படும் நாவல்கள் பொதுவாக கொந்தளிப்போடு தான் இருக்கும். ஆனால், இந்நாவலின் கதைசொல்லியாக கடைசிமகன் விமல் வருகிறான். வாழ்வை ஒரு பறவையின் இறகைபோல் வாழ்ந்து கடப்பவன். எதன் மீதும் விருப்பும் வெறுப்பும் இன்றி அக்கணத்தில் தோன்றுவதை நிகழ்த்துபவன். இப்படி ஒருவன் மூலம் கதைசொல்லும் போது ஒரு அபூர்வமான அனுபவம் ஏற்படுகிறது. மற்றொரு ஈர்கக்கூடிய கதாபாத்திரமாக வருபவன் இரண்டாம் அண்ணன் 'வினய்'. சாக்த பாதையை தேர்ந்தெடுத்து பல்வேறு சறுக்கல்களை சந்தித்து தான் விழையும் இடத்தை அடையமுடியாது தவிப்பவன்.  அடுத்ததாக, தன்னை ஒரு இயக்கத்தில் பொருத்திக்கொண்டு ஒரு 'நல்ல' துறவியாக வரும் மூன்றாவது அண்ணன் வினோத். இறுதியாக, தன்னை

திறந்து பார்த்த வாசல்கள்

Image
 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை வாசித்த புத்தகங்களின் பட்டியல் : 1. இயந்திரம் - மலையாற்றூர் ராமகிருஷ்ணன் 2. வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர் 3. பதின் - எஸ்.ராமகிருஷ்ணன் 4. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் 5. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி (2-5-20) 6. வெண்முரசு - களிற்றியானை நிரை - ஜெயமோகன் (6-5-20) 7. வெண்முரசு - தீயின் எடை - ஜெயமோகன் (9-5-20) 8. புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம் (12-5-20) 9. அன்புள்ள ஏவாளுக்கு - Alice Walker (14-5-20) 10. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் (15-5-20) 11. இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் (20-5-20) 12. கடல்புரத்தில் - வண்ணநிலவன் (23-5-20) 13. விஷ்ணுபுரம் - ஜெயமோகன் (31-5-20) 14. நினைவுதிர் காலம் - யுவன் சந்திரசேகர் (3-6-20) 15. இந்திய பயணம் - ஜெயமோகன் (5-6-20) 16. வெண்முரசு - இமைக்கணம் - ஜெயமோகன் (1-7-20) 17. ராஜன் மகள் - பா.வெங்கடேசன் (2-7-20) 18. Siddhartha - Herman Hesse (4-7-20) 19. The Little Prince - Antonie Saint Exupery (9-7-20) 20. Animal Farm - George Orwell (10-7-20) 21. A Christmas Carol - Charles Dickens (10-7-20) 22. The Art of War - Sun

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்

Image
  நிலம் பூத்து மலர்ந்த நாள் இன்றைய தமிழ் நிலத்தின் சிறப்புப் பண்புகளாக வீரம், காதல், விருந்தோம்பல் போன்ற விழுமியங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விழுமியங்கள் எப்படி, யாரால் முடிவுசெய்யப்படுகின்றன? இவை எங்கு வேர்கொண்டுள்ளன? போன்ற கேள்விகளை கேட்டுப்பார்த்தோமானால், "செம்புல பெயல் நீர் போல்...", "யாதும் ஊரே யாவரும் கேளீர்!" போன்ற வரிகள் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்டு, அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டு வரும் விழுமியங்களாக இவை விளக்கமளிக்கப்படும். ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சிறப்புகள் அனைத்தும் அதன் ஆதி இலக்கிய ஆக்கங்களிலே வேர்கொண்டுள்ளன. அதனடிப்படையில் நம் தமிழ் மொழியின் விதைக்களஞ்சியமாக திகழ்வது 'சங்க இலக்கிய' பாடல்களாகும். பல்வேறு புலவர்கள், பலதரப்பட்ட நிலங்களிலிருந்து வெவ்வேறு காலங்களில் எழுதியவற்றுள் காலத்தால் அழியாமல் எஞ்சிநிற்கும் பாடல்களின் தொகுப்பே சங்க இலக்கியம் எனப்படுகிறது. இச்சங்க இலக்கிய பாடல்களில் வெளிப்படும் தொல் தமிழ் நிலத்தின் பண்புகள், தரிசனங்கள், வாழ்கைபாடுகள் ஆகியவற்றின் சாரம் கொண்டு எழுதப்பட்ட நாவலே 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. மலைய

குமரித்துறைவி : சிறு குறிப்பு

Image
  குமரித்துறைவி - ஜெயமோகன் அபராமான வாசிப்பனுபவத்தை அளித்தது இக்கதை. தேன்குடத்தில் தூக்கி வீசப்பட்டவன் போல எத்தனை நெகிழ்வுகள் எத்தனை விம்மல்கள எத்தனை தித்திப்புகள். பொதுவாக நான் இந்த சடங்குகள் திருவிழாக்கள் போன்றவற்றின் மேல் பெரிய ஆர்வமுடையவன் அல்ல. ஆனால் இக்கதையில் வெளிப்படும் மானுட நாடகத்திற்கும் மனஎழுச்சிகளுக்கும் முன்னால் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு முழுதாக திளைக்க முடிந்தது. கலையின் நோக்கமே இதுதானோ? எத்தனை விழிகளை திறக்கிறது, எத்தனை திரைகளை விலக்குகிறது, எத்தனை சுவைகளை அளிக்கிறது.. ஒரு சிறு வாழ்விற்குள் பல பெரு வாழ்வுகளை திணித்து நம்மை விரிவடைய செய்து, விராட ரூபனாக்குகிறது. இதை ஒட்டுமொத்தமாக தொகுக்கவே நிச்சயம் பல வாசிப்புகள் தேவைப்படும். எதை சொல்வது எதை விடுவது... மீனாக்ஷிஅம்மன், சுந்தரேஸ்வரர், ஆதிகேசவன், சாஸ்தா, முத்தாலம்மன், பொல்லாப்பிள்ளையார் என கண் நிறைய வைக்கும் சூட்சும கதாபாத்திரங்கள் ஒருபுறம்.  சர்.மார்த்தாண்டன், சிறமடம் திருமேனி, வேணாடு அரசர், கங்கம்மா தேவி, நாயக்கர் தளவாய் என வியப்பில் ஆழ்த்தும் வரலாற்று பாத்திரங்கள் மறுபுறம். பெரிய மனிதர்களின் பெரு மனவிரிவுகள், நுண்ணி