உறுபசி - கல்பொருசிறுநுரை
சம்பதின் மறைவிற்கு பிறகு அவனது நண்பர்கள் வழியே சிதறிய நினைவுகளாக அவனது வாழ்வு சொல்லப்படுகிறது.
அழகர், ராமதுரை, மாரியப்பன், யாழினி, ஜெயந்தி இவர்கள் ஐவரும் கண்ட சம்பத் தன்னை ஒரே நேரத்தில் ஈர்க்கவும், விலக்கவும், வெறுக்கவும் செய்பவனாக உள்ளான். செடிகளை விற்க மறுப்பவன், தீப்பெட்டி தீக்குச்சிகளை விரும்புபவன், சதா சிந்தனை செய்பவன் போன்ற வித்யாசமான குணங்களை கொண்டவன்.
தன்னை ஒரு கள்ளிச்செடி என்றும் அணைப்பவர்களை காயப்படுத்துவேன் என்றும் நினைக்கிறான்.