சமீபத்தில் வாசித்து முடித்த பா. ராகவனின் 'புல்புல்தாரா' ஒரு சுவாரசியமான நாவல். தெளிவான கதாபாத்திரங்களும், விறுவிறுப்பான நிகழ்வுகளையும் கொண்டு புனையப்பட்ட ஒரு நெடுங்கதை.
அலகிலா விளையாட்டு, யதி, இறவான் ஆகிய நாவல்களுக்கு பிறகு நான் வாசிக்கும் நான்காவது பாரா நாவல் இது. அவரது சமூகவலைதளத்தை முன்னர் தொடர்ந்து கவணித்து வந்துள்ளேன். அதில் அவரது கருத்துக்களும் பார்வையும் ஆர்வமூட்டக்கூடியாவையாக இருக்கும். அப்போதிலிருந்தே அவரது படைப்புகளை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.