September 15, 2020

மனப்பிறழ்வும் கலையும் - சாரு நிவேதிதா - கடிதம்

 அன்புள்ள சாரு,

உங்கள் 'கோபி கிருஷ்ணன் உரை'யில் பங்கேற்றேன். இதுதான் நான் பங்கேற்கும் முதல் கூட்டம். 
மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பேராசிரியரைப் போல் வார்த்தை வார்த்தையாக விளக்கினீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியம் மீதுள்ள passion அவ்வுரையை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது.
(பொதுவாகப் பேராசிரியர்களிடம் உள்ள குறை என்பது இந்த passion இல்லாமைதான்.)

இளிப்பியல் - ஜெயமோகன் - கடிதம்

 அன்புள்ள ஜெயமோகன்,

'இளிப்பியல்' வாசித்தேன். நான் சமூக ஊடகங்களில் activeவாக இருப்பவன் அல்ல. அது எனக்கு ஒரு ஒவ்வாமையையே அளிக்கிறது. நண்பர்கள் "ஏன்?" என்று கேட்கும் போது "ஆர்வமில்லை" என்று மட்டும் சொல்லிவிடுவேன். ஆனால், ஏன் அது ஒவ்வாமை அளிக்கிறது என்று எனக்குள் வினவி ஒருவாறு தொகுத்துக்கொண்டேன்.