அன்புள்ள சாரு,
உங்கள் 'கோபி கிருஷ்ணன் உரை'யில் பங்கேற்றேன். இதுதான் நான் பங்கேற்கும் முதல் கூட்டம்.
மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பேராசிரியரைப் போல் வார்த்தை வார்த்தையாக விளக்கினீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியம் மீதுள்ள passion அவ்வுரையை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது.
(பொதுவாகப் பேராசிரியர்களிடம் உள்ள குறை என்பது இந்த passion இல்லாமைதான்.)